இலைகளாய் இணையும் போதெல்லாம்
நம்மில்
சிரிப்பு எனும் பூ உயிர்பெறுகிறது...
பெற்றோரிடமும் உற்ராரிடமும்
ஊமையாகும் பல வார்த்தைகள்
நம் நட்பில் உயிர்பெறுகிறது...
கல்லூரி காலம் முடிந்து
கரம் பிரிகின்றோம் நம் கடமைகளுக்காக
இதயத்தால் ஒன்றுபட்டு
இடத்தால் வேறுபட்டு இருக்கும்போது
நம் நிகழ்வுகளையும் , நினைவுகளையும் பகிரிந்துகொள்ள
கடவுள் நம்மை கண் காட்டினால்
அன்று கைகுலுக்கி கொள்வோம்
நம் கதை பேசி கொள்வோம்...
நண்பா
நீ பார்வை மறைந்தாலும்
பாதை பிரிந்தாலும்
நம் நட்பு என்றும் உயிர்த்திருக்கும்...