January 23, 2009

நட்பில் உயிர்பெறுகிறது

நட்பெனும் செடிதனில் - நாம்
இலைகளாய் இணையும் போதெல்லாம்
நம்மில்
சிரிப்பு எனும் பூ உயிர்பெறுகிறது...

பெற்றோரிடமும் உற்ராரிடமும்
ஊமையாகும் பல வார்த்தைகள்
நம் நட்பில் உயிர்பெறுகிறது...

கல்லூரி காலம் முடிந்து
கரம் பிரிகின்றோம் நம் கடமைகளுக்காக
இதயத்தால் ஒன்றுபட்டு
இடத்தால் வேறுபட்டு இருக்கும்போது
நம் நிகழ்வுகளையும் , நினைவுகளையும் பகிரிந்துகொள்ள
கடவுள் நம்மை கண் காட்டினால்
அன்று கைகுலுக்கி கொள்வோம்
நம் கதை பேசி கொள்வோம்...

நண்பா
நீ பார்வை மறைந்தாலும்
பாதை பிரிந்தாலும்
நம் நட்பு என்றும் உயிர்த்திருக்கும்...

என்றும் நட்புடன்,

சாந்தகுமார்