December 19, 2008

மீண்டும் ஓர் ஜனனம்

எண்ணம் தான் உன்னிடம் ஒரு கை
அன்னம் வாங்கி உண்ண...
என்ன செய்ய
வேலைக்காக விலகியுள்ளேன்
உன் பார்வையிலிருந்து மட்டும்
உன் பாசத்திலிருந்து அல்ல ...

அவ்வப்போது
தொலைபேசியால் தொலைவை மறந்தாலும்
துண்டிக்கும் முன், துடிக்கும் என் இதயத்திற்கு
உன் இதழ்கள் சொல்லும் ஓர் ஆதரவு
"நாளை பேசுவோம்" என்ற வார்த்தைதான்...

ஆறுதலாக ஆயிரம் இருந்தாலும்
அம்மா உன் மடியில் அரைநொடி நேரம்
கிடைக்காமல் ஆறுதல் எங்கே...

வீட்டில் உன் நிழலாய் நான் இருந்தேன் - இங்கே
உன் நினைவோடு நானிருக்கின்றேன்...

சில சமயங்களில்
என் கண்ணீர் கருவிழி தாண்டும் போது
கடவுளை கேட்கிறேன் - உன் கருவினில்
மீண்டும் ஓர் ஜனனம்...

உனது குமார்...

3 comments:

  1. Wonderful da... nice way of expressing feelings.. Keep it up..
    Kavingar Santha kumar (idu poduma)


    by Fakhir

    ReplyDelete
  2. hearty thanks for your encouraging comments da.. இது போதும் ஆனாலும் இன்னும் நல்ல நச்சுனு நங்குரம் மாதிரி ட்ரை பண்ணு.. ok va.. :)

    ReplyDelete
  3. Hi ur kavithai r very super.keep writing.

    ReplyDelete