கவிதைகளே கவிதை கேட்க காத்திருக்கும்
அவற்றை உன் உதடுகளால் உச்சரிக்கையில்
உன் காந்தக்கண்களே என்னை கவருகையில்
அதில் மையிட்டு ஏனோ மையல் கொள்ளச்செய்கிறாய்...,
பெண்ணின் கண்கள் கவிபாடும் என்று
பல கவிதைகளில் கண்டுள்ளேன்
ஆனால் உண்மையில் கண்டுகொண்டேன்
தினமும் நான் படிக்க துடிக்கும்
உலகின் சிறந்த கவிதை உன் கண்கள் என்று...,
மண்ணில் நான் இருப்பதற்கு
புவி ஈர்ப்பு விசை காரணமாம்
உன் விழி ஈர்ப்பைப் பற்றி தெரியாத
ஒரு விஞ்ஞானியின் கருத்து...,
உன் இளமை இமைகள்
உன் கண்ணை கட்டி அணைக்கையில்
ஏதோ என்னை உன் அருகே அழைப்பது போல்
ஓர் பிரம்மை...,
உன் வாசமே என் சுவாசமாக வேண்டும்
என் வசம் வாரயோ - என்று
பிரம்மனே உன்னிடம் பிச்சை எடுக்கயில்
உன் புருவத்தினிடையே பொட்டிட்டு
உன் பருவத்தினை பருக போகும்
நான் பாக்கியசாலி தானே!!!
இதுவரையிலும்
கவிஞன் எனக்கு கிடைக்காத வரம்
என் கவிதை காகிதத்திற்கு
உன் விரல்களிடையே விளையாட...,
அன்பே
உன் அழகை தமிழ் வார்த்தைகளால் அலங்கரித்தேன்
உண்மையில்
அழகு பெற்றது
என் வார்த்தைகள் தான் - நன்றி ...
KANINIYUM KAVI PPULAMAI PETRATHU SANTHA VIN KAIGAL PATTATHAL........
ReplyDeleteKAMBAN VEETU KATTU THARIYUM KAVI PAADUM,
ITHO INTHA KATTU THARI RASIGANIN VAASAGANGAL......
VAZHTHUGALUDAN
UN UYIR NANBAN
VENKATESHWARANSUGUMAR
மண்ணில் நான் இருப்பதற்கு
ReplyDeleteபுவி ஈர்ப்பு விசை காரணமாம்
உன் விழி ஈர்ப்பைப் பற்றி தெரியாத
ஒரு "விண்ஞானியின்" கண்ணை கருத்து...,
are you referring an astrologer or scientist here.. if it is scientist means correct the spelling..
overall nice kavidai ..
by fakhir
keep ur good work ..